ஒரு பிரச்சினையும் இல்லை.. 2021 வரை எங்க ஆட்சிதான்.. ஜெயக்குமார் பொளேர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2021 வரை அதிமுக ஆட்சியே தொடரும் என நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறம்பட ஆட்சி செய்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிமுக தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓ.பி.எஸ் அணி, டிடிவி தினகரன் அணி என 3 அணிகளாக உள்ளது. இதனிடையே சென்னையில் தினகரனுடன் எம்.எல்.ஏ.,க்கள் ஒருவர் அடுத்தடுத்து சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட 9 மாவட்ட எம்.எல்.ஏ.,க்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

The AIADMK Regime will continue till 2021, says minister jayakumar

இந்நிலையில் தலைமைச் செயலகத்திற்கு வெளியே செய்தியளார்களை சந்தித்தார் நிதியமைச்சர் ஜெயக்குமார். அப்போது அவர் கூறுகையில், சட்டசபை கூட உள்ளதால் தொகுதியில் நிலவும் பிரச்சனை குறித்து எம்எல்ஏக்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டறிந்தார். ஜூன் 14 ஆம் தேதி தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர் சிறப்பாக இருக்கும். எடப்பாடி பழனிச்சாமி திறம்பட ஆட்சி நடத்தி வருகிறார்.

2021 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி தொடரும். ஆட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. 26 எம்எல்ஏக்களும் தனிப்பட்ட முறையில் டிடிவி தினகரனை சந்தித்து இருப்பார்கள் அதை அரசியாக்க வேண்டாம். என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தங்கதமிழ்ச்செல்வன் கூறியதை பொருட்படுத்த வேண்டியதில்லை. இவ்வாறு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+