கையெழுத்தில்லாத ஆவணம் மூலம் தகுதி நீக்கம்... சபாநாயகர் நடுநிலை தவறிவிட்டார் - அபிஷேக் மனு சிங்வி
முதல்வருக்கு எதிராகத்தான் கடிதம் கொடுத்தோமே தவிர ஆட்சிக்கு எதிராக ஒருபோதும் கடிதம் அளிக்கவில்லை என்று தினகரன் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.
சென்னை: பெயரில்லாத,கையெழுத்தில்லாத ஆவணம் மூலம் கொறடா புகார் மனு சமர்பிக்கப்பட்டுள்ளது. அதனை வைத்து 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தகுதிநீக்கம் செய்து நடுநிலை தவறிவிட்டார் என்று தினகரன் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.
தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரும் ஆளுநரை சந்தித்து முதல்வருக்கு எதிராக கடிதம் அளித்தனர் என்ற காரணம் காட்டி சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார்.
இதை எதிர்த்து தகுதி நீக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இன்று இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது. தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களுக்காக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதிட்டார்.
முதலமைச்சர் மீது தான் நம்பிக்கையை இழந்தோமே தவிர ஆட்சி மீது அல்ல என வாதிட்டார். ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ் தரப்பு மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார்.
ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ் துணை முதலமைச்சராக ஆன பின்பே எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன்? என்றும் கேட்டார் அபிஷேக் சிங்வி.
பெயரில்லாத,கையெழுத்தில்லாத ஆவணம் மூலம் கொறடா புகார் மனு சமர்பிக்கப்பட்டுள்ளது. கொறடா அளித்த புகார் மனு தங்களுக்கு அளிக்கவில்லை என அபிஷேக் சிங்வி வாதிட்டார்.
ஊழலுக்கு எதிரான முதல்வருக்கு எதிராகத்தான் மனு கொடுத்தோம். அரசை கவிழ்க்க வேண்டும் என்று ஒருபோதும் கூறவில்லை.
சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ்க்கு நான்கு முறை எதிர்ப்பு தெரிவித்தும் ஒருதலை பட்சமாக நடவடிக்கை எடுத்து விட்டார் என்றும் தினகரன் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.
கையெழுத்து இல்லாத ஆவணம் என்று கூறியதற்கு கொறடா தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி எதிர்ப்பு தெரிவித்தார். நீதிமன்றத்தில் கார சார வாதங்கள் நடைபெற்று வருகின்றன.
-
கௌதம் மேனனுக்கு எதிராக திரும்பிய வழக்கு.. ரூ4.25 கோடியை வட்டியுடன் செலுத்த ஐகோர்ட் உத்தரவு! -
இயக்குநர் ஷங்கர் சொத்து முடக்கப்பட்டதற்கு விதிக்கப்பட்ட தடை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு! -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications