தொந்தரவு தராமல் போராடினாலும் எங்களை விட மாட்டீர்களா?.. காவிரியில் விவசாயிகள் ஆவேசம்
யாருக்கும் தொந்தரவு தராமல் போராடினாலும் எங்களை விட மாட்டீர்களா? என காவிரி ஆற்றில் போராடிய விவசாயிகள் கேட்டனர்.
Recommended Video

திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சியில் ஆற்று மணலில் புதைந்து போராடியவர்களை காவல் துறையினர் அப்புறப்படுத்தியபபோது விவசாயிகள் ஆவேசமாக முழக்கமிட்டனர்.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் காவிரியாறு மண்ணில் அய்யாக்கண்ணு தலைமையில் ஏராளமான விவசாயிகள் திருச்சி காவிரியாறு பகுதிக்குள் இறங்கி கொளுத்தும் வெயிலில் தங்கள் உடலை மண்ணில் புதைத்துக் கொண்டனர்.
அவர்களுக்கு மாலை அணிவித்து, நெற்றியில் நாமம் போடப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என போராட்டக்களத்தில் விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது அங்கு வந்த காவல்துறையினர் கொளுத்தும் வெயிலில் ஆற்று மணலில் புதைந்திருந்த விவசாயிகளை வெளியேற்ற அப்புறப்படுத்தினர். ஆனால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
"யாருக்கும் தொந்தரவு தராமல் போராட்டத்தில் ஈடுபட்டாலும் எங்களை விட மாட்டீர்களா" என விவசாயிகள் காவல்துறையினரை பார்த்து ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினர். "வெயில் இவ்வளவு கொளுத்துகிறது. ஆற்று மணலுக்குள் இப்படியே இருந்தால் உங்கள் உயிர்களுக்கு ஆபத்து நேரிடும், தயவுசெய்து போராட்டத்தை கைவிடுங்கள்" என போலீஸார் அறிவுறுத்தினர்.
பின்னர் போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து முழக்கமிட்ட வண்ணம் இருந்தனர்.












Click it and Unblock the Notifications