For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உக்கடம் அருகே பஸ் சக்கரத்தில் தலை சிக்கி பெண் பலி.. உறவினர்கள் ஆவேசம்.. சாலை மறியல்

சாலை விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

By T Nandhakumar
Google Oneindia Tamil News

Recommended Video

    உக்கடம் அருகே பஸ் சக்கரத்தில் தலை சிக்கி பெண் பலி-வீடியோ

    கோவை: கோவை உக்கடம் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று, இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் மீது மோதியதில் அவரது தலை பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதில் ஆத்திரமுற்ற பொதுமக்கள் பேருந்தின் கண்ணாடியை உடைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    உக்கடம் அருகே லாரிபேட்டை என்னுமிடத்தில் பொள்ளாச்சி நோக்கி தனியார் பேருந்து அதிவேகமாக நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் முன்னே இரு சக்கர வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இரு சக்கரத்தின் பின்பகுதியில் ஆஜிரா பீவி என்ற சமையல் வேலை செய்யும் பெண் அமர்ந்திருந்தார். வேகமாக வந்த பேருந்து இரு சக்கரவாகனத்தின் பின்பக்கத்தில் பலமாக மோதியது. இதில் ஆஜிராபீவி நிலைதடுமாறி கீழே விழுந்ததுடன், பேருந்தின் சக்கரத்தில் அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

    The Girl Kills The Bus On A Two Wheeler In Ukkadam

    இதனால் ஆத்திரமுற்ற அப்பகுதி மக்கள் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்வரை பெண்ணின் உடலை கொண்டு செல்ல அனுமதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பேருந்தை அங்கிருந்த அப்புறப்படுத்திய காவல்துறையினர் இது தொடர்பாக விபத்தை ஏற்படுத்தி தப்பி சென்ற நட்ராயன் என்கிற பழனியை பிடித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    English summary
    The fastest bus collided beneath the two-wheeler. The young lady Ajirobevi fell down, and his head drowned on the bus on the bus and died on the spot. Thus the people of the province had broken the glasses of the bus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X