ரஜினிகாந்த், விஜயகாந்த் விசயத்தில் தவறு சரிசெய்யப்பட்டுவிட்டது பிரவீன்குமார்
சென்னை: வாக்களித்த பிறகு 'மை' வைத்துக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த் மீதும், வாக்களிக்கும் போது மனைவியுடன் சென்ற தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா, என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன்குமார், கூறியதாவது:
நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்த பிறகு மை வைக்கப்பட்டத்தில் தவறு நேர்ந்துள்ளது என்றும், ரஜினிகாந்த் விவகாரத்தில் தவறு உடனே சரி செய்யப்பட்டதாகவும் கூறினார்.
வாக்களிக்கும் போது தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்துடன் அவரது மனைவி பிரேமலதா சென்றதை கவனிக்காதது தவறுதான் என்று கூறிய அவர், வாக்குச்சாவடி மையத்திற்குள் 2 பேரும் சென்றதை கவனிக்காதது முதன்மை தேர்தல் அதிகாரியின் தவறு என்றும், விஜயகாந்த் யாருக்கு வாக்களித்தார் என்ற ரகசிய காப்பு மீறப்படவில்லை என்றும் பிரவீன்குமார் விளக்கம் அளித்தார்.