பயணிகள் நெரிசல் எதிரொலி: சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கம்
சென்னை: பயணிகளின் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சென்னை - நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தென்னக ரயில்வேயை தென்பகுதி மக்களால் நாளுக்கு நாள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் முக்கிய ரயில்கள் அனைத்தும் காத்திருப்போர் பட்டியலில் இருக்கின்றனர் இதில் குறிபபாக சென்னை செல்லும் ரயிலில் இடம் கிடைக்காமல் பயணிகள் திண்டாடி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி சென்னை எழும்பூரிலிருந்து வரும் டிசம்பர் 11 மற்றும் 18ந் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இரவு 9.05-க்கு சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டிசம்பர் 13 மற்றும் 20ந் தேதிகளில் பிற்பகல் 2.45க்கு நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை முதல் துவங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications