கலாம் பிறந்த நாளை சர்வதேச மாணவர் தினமாக ஐநா சபை அறிவிக்கவில்லை.. ஐநா அதிகாரி கடிதம்
சென்னை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளை சர்வதேச மாணவர் தினமாக ஐநா சபை அறிவித்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என இந்தியாவுக்கான ஐநா அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தன் வாழ்நாள் முழுவதும் மாணவர்களை ஊக்கப்படுத்தியவர். இறக்கும் போது கூட மாணவர்களுக்காக உரையாற்றியபடி உயிரைவிட்டவர் கலாம்.
இந்நிலையில் அப்துல் கலாமின் பிறந்த தினமான அக்டோபர் 15ம் தேதியை சர்வதேச மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை அகில இந்திய தனியார் ஊழியர் சங்கம் சார்பிலும் வைக்கப்பட்டது.

கலாம் பிறந்த நாள்
இந்நிலையில் அப்துல் கலாமின் பிறந்த நாளை சர்வதேச மாணவர் தினமாக கடந்த 2010ம் ஆண்டே ஐநா சபை அறிவித்துவிட்டதாக ஊடகங்களில், நாளேடுகளில் செய்திகள் வெளியாகின. ஆனால் அப்போது அதற்கான எந்த ஆவணங்களையும் ஊடகங்கள் வெளியிடவில்லை.

கல்லூரி ஊழியர் சங்கம்
இதன் காரணமாக அகில இந்திய தனியார் கல்லூரி ஊழியர் சங்க தலைவர் கே.எம். கார்த்திக் சார்பில் இந்தியாவில் உள்ள ஐநா தகவல் மைய அதிகாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில் கலாமின் பிறந்த நாளை சர்வதேச மாணவர் தினமாக ஐநா அறிவித்ததாக வெளியான தகவல் குறித்து விளக்கம் கேட்கப்பட்டு இருந்தது.

வாக்கெடுப்பு நடத்தப்படும்
இதற்கு பதில் அளித்துள்ள இந்தியாவுக்கான ஐநா அதிகாரி ராஜீவ் சந்திரன, ஐநா எந்த ஒரு தினத்தையும் அறிவிப்பதற்கு முன்பு, ஐநா பொதுக்குழுவில் அது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டு இறுதியாக வாக்கெடுப்பு நடத்தப்படும்.

அறிவிக்கவில்லை
ஆனால் கலாம் பிறந்த நாள் விஷயத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள தினத்துக்காக நடத்தப்படவில்லை. எனவே அது தொடர்பான அனைத்து தகவல்களும் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார்,
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications