நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்... கொந்தளிக்கும் கம்பம் பள்ளத்தாக்கு!
நியூட்ரினோ ஆய்வு திட்டத்துக்கு தேனி விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
தேனி: சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என தேனி மாவட்ட விவசாயிகள் கொந்தளிக்கின்றனர்.
நியூட்ரினோ ஆய்வு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. மக்களின் எதிர்ப்புகளைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்ட விவசாயிகளைப் பொறுத்தவரையில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைந்தால் முல்லை பெரியாறு, வைகை மற்றும் இடுக்கி என சுமார் 20 அணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்கின்றனர். மேலும் அம்பரப்பர் மலையை குடைந்து 2 கி.மீ நீளத்திற்கு சுரங்கம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 11,25,000 டன் பாறையை 1000 டன் வெடிமருந்து பயன்படுத்தி வெடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய சுற்றுச் சூழல் கேட்டை மட்டும் அல்ல மக்கள் வாழவே முடியாத ஒரு நிலையை உருவாக்கும்.
இதனால் வனவிலங்குகள் மலைகளில் இருந்து வெளியேறி கிராமங்களுக்குள் தஞ்சமடையும் நிலை வரும் என அச்சப்படுகின்றனர். அத்துடன் நியூட்ரினோ ஆய்வுக்கான காந்த கருவியை குளிர்விக்க ஒவ்வொரு நாளும் 2.5 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை உள்ளது. குண்டலநாயக்கன்பட்டி முல்லைபெரியாற்று பகுதியில் உறைகிணறு அமைத்து தண்ணீர் எடுக்க பூமிக்கு அடியில் குழாய்கள் பதித்துள்ளனர். இதற்காக பெரியாறு அணையில் இருந்து 10 டி.எம்.சி. தண்ணீர் எடுக்கவும் உள்ளனர். முல்லைப் பெரியாறில் 21 டி.எம்.சி. நீர்தான் ஆண்டு முழுவதுமே கிடைக்கிறது. இதில் 10 டி.எம்.சி நீரை நியூட்ரினோவுக்கு செலவிட்டால் பெரியாறு பாசனத்தை நம்பியுள்ள விவசாயமே பொய்த்து போகும் என்பது விவசாயிகளின் அச்சமாகும்.
ஆகையால் இத்தகைய கேடுவிளைவிக்கும் மக்கள் விரோத திட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தேனி விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications