கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஷாமியானா பந்தல் கூட போடாதது வேதனையிலும் வேதனை
கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஷாமியானா பந்தல் கூட போடாதது வேதனை அளிக்கிறது.
சென்னை: கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஷாமியானா பந்தல் கூட போடாதது தொண்டர்களையும் மக்களையும் வேதனையடைய செய்துள்ளது.
கருணாநிதி நேற்று மாலை உடல்நல குறைவுகளால் காலமானார். அவரது உடல் இன்று காலை ராஜாஜி அரங்கத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்நிலையில் அவரது கடைசி ஆசை மெரினாவில் அண்ணாவின் சமாதிக்கு பக்கத்தில் ஒரு இடம் வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதன் பேரில் தமிழக அரசிடம் திமுக மனு அளித்தது. எனினும் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என்று கைவிரித்ததோடு காந்தி மண்டபத்தில் ஒதுக்குவதாக தெரிவித்தது.

அண்ணா சமாதி
இதையடுத்து நீதிமன்றத்தை திமுக நாடியது. இதில் கருணாநிதிக்கு இடம் மெரினாவி ஒதுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இன்று காலை முதல் அவசர அவசரமாக மெரினாவில் அண்ணா சமாதிக்கு பக்கத்தில் பள்ளம் தோண்டு பணிகள் நடைபெற்றது.

இல்லாதது வருத்தம்
அவரது உடல் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அண்ணா சமாதிக்கு பக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆனால் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு ஷாமியானா பந்தல் கூட இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது.

சேதமடைய வாய்ப்பு
சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. ஒரு வேளை கனமழை பெய்யும் பட்சத்தில் நல்லடக்கம் நடைபெற்ற இடத்தில் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற அரைக்குறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொண்டர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தொண்டர்கள் வருத்தம்
அஞ்சலி செலுத்த வந்த முக்கியஸ்தர்களுக்கு போடப்பட்ட பந்தலை கருணாநிதிக்கு போட எத்தனை நாழிகை ஆகி விட போகிறது? போராடி பெற்ற இடம் சேதமடைந்தால் என்னவாவது என்ற கவலை அனைவர் மத்தியிலும் உள்ளது. மேலும் ஜெயலலிதாவை நல்லடக்கம் செய்த போது இயற்கை இடர்களில் இருந்து காக்க அவரை அடக்கம் செய்த இடத்தில் ஷாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications