கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஷாமியானா பந்தல் கூட போடாதது வேதனையிலும் வேதனை
கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஷாமியானா பந்தல் கூட போடாதது வேதனை அளிக்கிறது.
சென்னை: கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஷாமியானா பந்தல் கூட போடாதது தொண்டர்களையும் மக்களையும் வேதனையடைய செய்துள்ளது.
கருணாநிதி நேற்று மாலை உடல்நல குறைவுகளால் காலமானார். அவரது உடல் இன்று காலை ராஜாஜி அரங்கத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்நிலையில் அவரது கடைசி ஆசை மெரினாவில் அண்ணாவின் சமாதிக்கு பக்கத்தில் ஒரு இடம் வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதன் பேரில் தமிழக அரசிடம் திமுக மனு அளித்தது. எனினும் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என்று கைவிரித்ததோடு காந்தி மண்டபத்தில் ஒதுக்குவதாக தெரிவித்தது.

அண்ணா சமாதி
இதையடுத்து நீதிமன்றத்தை திமுக நாடியது. இதில் கருணாநிதிக்கு இடம் மெரினாவி ஒதுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இன்று காலை முதல் அவசர அவசரமாக மெரினாவில் அண்ணா சமாதிக்கு பக்கத்தில் பள்ளம் தோண்டு பணிகள் நடைபெற்றது.

இல்லாதது வருத்தம்
அவரது உடல் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அண்ணா சமாதிக்கு பக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆனால் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு ஷாமியானா பந்தல் கூட இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது.

சேதமடைய வாய்ப்பு
சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. ஒரு வேளை கனமழை பெய்யும் பட்சத்தில் நல்லடக்கம் நடைபெற்ற இடத்தில் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற அரைக்குறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொண்டர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தொண்டர்கள் வருத்தம்
அஞ்சலி செலுத்த வந்த முக்கியஸ்தர்களுக்கு போடப்பட்ட பந்தலை கருணாநிதிக்கு போட எத்தனை நாழிகை ஆகி விட போகிறது? போராடி பெற்ற இடம் சேதமடைந்தால் என்னவாவது என்ற கவலை அனைவர் மத்தியிலும் உள்ளது. மேலும் ஜெயலலிதாவை நல்லடக்கம் செய்த போது இயற்கை இடர்களில் இருந்து காக்க அவரை அடக்கம் செய்த இடத்தில் ஷாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications