For Daily Alerts
Just In
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் உற்சவர் சிலையில் தங்கம் சேர்க்கப்படவில்லை.. 5.75 கிலோ தங்கம் அபேஸ்!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உற்சவர் சிலையில் ஒரு சதவீதம் கூட தங்கம் பயன்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில் உற்சவர் சிலையில் ஒரு சதவீதம் கூட தங்கம் பயன்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் கோவில் உற்சவர் சிலை சேதமடைந்துள்ளதாகவும், அதனை சீரமைக்கவும் மக்களிடம் 5.75 கிலோ தங்கம் வசூலிக்கப்பட்டது. இதற்கு அறநிலையத்துறையும் அனுமதி வழங்கியது.
ஆனால், இன்று நடந்த ஆய்வில் உற்சவர் சிலையில் தங்கம் சேர்க்கப்படாதது கண்டுபிடிக்கப்பட்டது. உற்சவர் சிலை செய்ய ஒரு சதவீத தங்கம் கூட சேர்க்கப்படவில்லை என சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு டி.எஸ்.பி., தலைமையிலான விசாரணைக்குழு கண்டுபிடித்துள்ளது.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உற்சவர் சிலைக்காக வசூலிக்கப்பட்ட 5.75 கிலோ தங்கம் என்னவானது என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
There is not even one percent gold in the Kancheepuram Eakambaranathar temple. Its come to know in the Police investigation. Police inquire about the missing 5.75 gold of the temple.
Story first published: Tuesday, January 2, 2018, 18:38 [IST]