ஒன்னு மன்னார்குடி மாபியா.. இன்னொரு மணல் மாபியா.. என்ன ஆச்சரியம் இதுல.. தினகரனை வாரிய ஸ்டாலின்!
மன்னார்குடி மாஃபியா கும்பலை, தாது மணல் மாஃபியா கும்பல் வந்து சந்திப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என டிடிவி.தினகரன் - வைகுண்டராஜன் சந்திப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்து
சென்னை: மன்னார்குடி மாஃபியா கும்பலை, தாது மணல் மாஃபியா கும்பல் வந்து சந்திப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என டிடிவி.தினகரன் - வைகுண்டராஜன் சந்திப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் ஆர்கே.நகரில் வேட்பு மனுத்தாக்கலுக்குப் பிறகு பிரச்சாரத்தை தொடங்குவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்களின் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது ஆர்கே.நகர் இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து திமுக செயல்தலைவரான ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது டிடிவி.தினகரன் - வைகுண்டராஜன் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின் மாஃபியா கும்பலை தாது மணல் மாஃபியா சந்தித்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றார்.
ஆர்கே.நகர் தொகுதியில் எப்போது பிரச்சாரத்தை தொடங்குவீர்கள் என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின் வேட்பு மனுத்தாக்கலுக்குப்பின் பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ஏரிகள் உள்ளிட்ட நீர் ஆதராங்கள் குறைந்துவிட்டது என்ற கேள்விக்கு பதில் கூறிய ஸ்டாலின் இந்த ஆட்சி அதுபற்றி எல்லாம் கவலைப்படவில்லை என குற்றம்சாட்டினார். அவர்களுடைய கவலையெல்லாம் குற்றவாளியாக இருக்கக்கூடிய சசிகலாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பினாமி ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதில் மட்டும் தான் உள்ளது என்றும் அவர் கூறினார்.
மக்களை பற்றி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் ஆர்கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதுக் குறித்து தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே பல புகார்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் ஸ்டாலின் கூறினார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications