11 எம்.எல்.ஏக்கள் வழக்கு: அரசியல் தலையீடு எதுவும் இல்லை அடித்து சொல்லும் அமைச்சர் ஜெயக்குமார்
11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் அண்மையில் தீர்ப்பு வழங்கிய சென்னை ஹைகோர்ட் 11 பேரும் எம்எல்ஏக்களாக நீடிக்கலாம் எனக்கூறி உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் காழ்ப்புணர்ச்சியுடன் நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பில் அரசியல் தலையீடு இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். மேலும் 11 எம்.எல்.ஏக்கள் வழக்கில் சட்டப்படிதான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications