சென்னையில் வரும் வாரம் முழுவதும் வெயில்... அடுத்த வாரத்தில்தான் லேசான மழையாம்... நார்வே வானிலை தகவல்
சென்னையில் வரும் வாரம் முழுவதும் வெயில் இருக்கும் என்றும் அடுத்த வாரத்தில்தான் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக நார்வே வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை: சென்னையில் வரும் வாரம் முழுவதும் மழைக்கு வாய்ப்பில்லை என்று நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 30-ஆம் தேதி தொடங்கியது. தொடக்க நாளிலேயே மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக வெயிலும் மழையும் மாறி மாறி இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. அதற்கு ஓகி என பெயரிடப்பட்டது. ஓகி புயல் தென் தமிழகத்தை உலுக்கியது.
இந்த புயல் கரையை கடந்த பிறகும் கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இந்நிலையில் தெற்கு அந்தமானில் உருவான வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமானில் நிலவி வருவதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே நார்வே வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை மழை கிடையாது என்றும் அடுத்த சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications