சென்னையில் வரும் வாரம் முழுவதும் வெயில்... அடுத்த வாரத்தில்தான் லேசான மழையாம்... நார்வே வானிலை தகவல்
சென்னையில் வரும் வாரம் முழுவதும் வெயில் இருக்கும் என்றும் அடுத்த வாரத்தில்தான் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக நார்வே வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை: சென்னையில் வரும் வாரம் முழுவதும் மழைக்கு வாய்ப்பில்லை என்று நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 30-ஆம் தேதி தொடங்கியது. தொடக்க நாளிலேயே மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக வெயிலும் மழையும் மாறி மாறி இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. அதற்கு ஓகி என பெயரிடப்பட்டது. ஓகி புயல் தென் தமிழகத்தை உலுக்கியது.
இந்த புயல் கரையை கடந்த பிறகும் கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இந்நிலையில் தெற்கு அந்தமானில் உருவான வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமானில் நிலவி வருவதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே நார்வே வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை மழை கிடையாது என்றும் அடுத்த சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications