'தலித்' இளைஞர் வாயில் சிறுநீர் கழித்த கொடூரம் - சி.பி.சி.ஐ.டி. விசாரணை தேவை: தொல்.திருமாவளவன்
சென்னை: கிருஷ்ணகிரி அருகே தலித் சமூக இளைஞரைத் தாக்கி அவரது வாயில் சிறுநீரை கழித்து கொடூர சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தொல். திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டம் கருவானூர் கிராமத்தில் ஊர் திருவிழாவின்போது கோயிலுக்குச் சென்றதற்காக அரவிந்தன் என்ற குறவர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை ஆதிக்க சாதி கும்பல் ஒன்று அடித்துத் துன்புறுத்தியதோடு அடிதாங்க முடியாமல் தண்ணீர் கேட்ட இளைஞரின் வாயில் சிறுநீர் கழித்திருக்கிறார்கள்.

இந்த வழக்கில் உள்ளூர் காவல்துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதால் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
இந்த சம்பவம் நடந்து மூன்று வாரங்கள் ஆனபோதிலும் குற்றவாளிகள் கைதுசெய்யப்படவில்லை. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழான இதை விசாரிக்கவேண்டிய ஊத்தங்கரை டி.எஸ்.பி. பாதிக்கப்பட்ட இளைஞரை சந்திக்கக்கூட இல்லை.அதுமட்டுமின்றி, ‘சிறுநீர் கழித்ததாக சொல்லப்படுவது உண்மை இல்லை' என அவர் பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார்.
இதிலிருந்தே அவர் இந்த வழக்கில் குற்றவாளிகளைப் பாதுகாக்க முயற்சிக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரியவருகிறது.
தற்போது ஊடகங்ளின்மூலம் இந்த கொடூர சம்பவம் வெளி உலகுக்குத் தெரியவந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞர் மீதே பொய்வழக்கு ஒன்றைப் போலீஸ் பதிவு செய்திருக்கிறது. இந்தச் சூழலில் இந்த வழக்கை உள்ளூர் காவல்துறை விசாரித்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது.
எனவே சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். அண்மைக்காலமாக தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.
தமிழக காவல்துறை சாதிவெறியர்கள்மீது சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காததன் விளைவே இது. வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலமுறை விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்தியிருக்கிறோம்.
ஆனாலும் தமிழக அரசு இதில் மெத்தனமாகவே இருக்கிறது. தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்திருக்கும் இந்த மனிதத்தன்மையற்ற சம்பவத்துக்காக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் வெட்கித் தலைகுனியவேண்டும்.
இதனால் இந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டிருக்கிறது என்பதைத் தமிழக அரசு உணரவேண்டும். இனியும் குற்றவாளிகளைக் காப்பாற்ற முற்படாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைத்திட இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் தமது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை












Click it and Unblock the Notifications