'தலித்' இளைஞர் வாயில் சிறுநீர் கழித்த கொடூரம் - சி.பி.சி.ஐ.டி. விசாரணை தேவை: தொல்.திருமாவளவன்
சென்னை: கிருஷ்ணகிரி அருகே தலித் சமூக இளைஞரைத் தாக்கி அவரது வாயில் சிறுநீரை கழித்து கொடூர சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தொல். திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டம் கருவானூர் கிராமத்தில் ஊர் திருவிழாவின்போது கோயிலுக்குச் சென்றதற்காக அரவிந்தன் என்ற குறவர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை ஆதிக்க சாதி கும்பல் ஒன்று அடித்துத் துன்புறுத்தியதோடு அடிதாங்க முடியாமல் தண்ணீர் கேட்ட இளைஞரின் வாயில் சிறுநீர் கழித்திருக்கிறார்கள்.

இந்த வழக்கில் உள்ளூர் காவல்துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதால் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
இந்த சம்பவம் நடந்து மூன்று வாரங்கள் ஆனபோதிலும் குற்றவாளிகள் கைதுசெய்யப்படவில்லை. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழான இதை விசாரிக்கவேண்டிய ஊத்தங்கரை டி.எஸ்.பி. பாதிக்கப்பட்ட இளைஞரை சந்திக்கக்கூட இல்லை.அதுமட்டுமின்றி, ‘சிறுநீர் கழித்ததாக சொல்லப்படுவது உண்மை இல்லை' என அவர் பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார்.
இதிலிருந்தே அவர் இந்த வழக்கில் குற்றவாளிகளைப் பாதுகாக்க முயற்சிக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரியவருகிறது.
தற்போது ஊடகங்ளின்மூலம் இந்த கொடூர சம்பவம் வெளி உலகுக்குத் தெரியவந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞர் மீதே பொய்வழக்கு ஒன்றைப் போலீஸ் பதிவு செய்திருக்கிறது. இந்தச் சூழலில் இந்த வழக்கை உள்ளூர் காவல்துறை விசாரித்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது.
எனவே சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். அண்மைக்காலமாக தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.
தமிழக காவல்துறை சாதிவெறியர்கள்மீது சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காததன் விளைவே இது. வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலமுறை விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்தியிருக்கிறோம்.
ஆனாலும் தமிழக அரசு இதில் மெத்தனமாகவே இருக்கிறது. தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்திருக்கும் இந்த மனிதத்தன்மையற்ற சம்பவத்துக்காக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் வெட்கித் தலைகுனியவேண்டும்.
இதனால் இந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டிருக்கிறது என்பதைத் தமிழக அரசு உணரவேண்டும். இனியும் குற்றவாளிகளைக் காப்பாற்ற முற்படாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைத்திட இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் தமது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications