கல்வியை வணிகமாக்கும் சர்வதேச ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக் கூடாது... திருமாவளவன்
சென்னை: கென்யாவில் நடைபெறும் உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் மேற்கொள்ளவிருக்கும் ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திடக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் உலக வர்த்தக அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது, இன்று தொடங்கும் இந்த மாநாடு வரும் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சேவைத்துறைகளான கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல் போக்குவரத்து, ஆற்றல் மற்றும் தொலைத்தொடர்பு ஆகிய துறைகளில் பன்னாட்டு நிறுவனங்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட நிபந்தனையற்ற அனுமதி அளிக்கும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. கல்வியை வணிகப் பொருளாக்கி விற்பனை செய்ய ஒப்புதல் தெரிவித்து இந்திய அரசு அம்மாநாட்டில் கையெழுத்திட உள்ளது.
இதனால் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்து வகுப்பினரின் கல்வி உரிமை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உலக வர்த்தக அமைப்பு மாநாட்டில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திடக் கூடாது என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications