தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்துக! தானியங்கி மது விற்பனைக்கு திருமாவளவன் கடும் எதிர்ப்பு!
மதுரை: தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானம் விற்கப்படுவது ஏற்புடையதல்ல என்றும் இதனை உடனடியாக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கியக் கட்சியான விசிக, தானியங்கி மதுபான விற்பனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி படிப்படியாக மதுவிலக்கை கொண்டு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏற்கனவே அன்புமணி ராமதாஸ், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தானியங்கி மதுபான விற்பனை முயற்சிக்கி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், திமுக கூட்டணிக் கட்சியான விசிகவும் இப்போது எதிர்குரல் எழுப்பியுள்ளது.
12 மணி நேர வேலை மசோதா வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் அறிவித்தாலும் இன்னும் அதன் தாக்கமும் அது ஏற்படுத்திய விவாதங்களும் ஓயவில்லை.

அதற்குள் தானியங்கி மதுபான விற்பனை நடைமுறை புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே தானியங்கி மதுபன விற்பனை மூலம் சில்லறை விற்பனையை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுவது தடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications