சிதம்பரத்தில் திருமாவளவனை அசைக்க முடியாது.. விசிகவை நெருங்க முடியாத அதிமுக - பாஜக.. தந்தி டிவி சர்வே
சிதம்பரம்: சிதம்பரம் லோக்சபா தேர்தலில் மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை அதிமுக மற்றும் பாஜக நெருங்க முடியாது என தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது. இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் உள்ள லோக்சபா தேர்தல் தொடர்பாக தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி சார்பில் இந்த கருத்து கணிப்பு என்பது மார்ச் 20 முதல் ஏப்ரல் 14 வரை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. அதன்படி சிதம்பரம் தொகுதியில் வெல்வது யார்? என்பது பற்றி ரிசல்ட் வெளியாகி உள்ளது.
சிதம்பரம் தொகுதி என்பது மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை இந்த தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாளவளவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வரும் தேர்தலிலும் அவர் தான் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக களமிறங்கி உள்ளார்.
இந்த தொகுதியில் திருமாவளவனை எதிர்த்து அதிமுகவில் சந்திரகாசன், பாஜக சார்பில் வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, நாம் தமிழர் சார்பில் ஜான்சிராணி ஆகியோர் களமிறங்கி உள்ளனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 41 சதவீதம் 47 சதவீதம்வரை ஓட்டு என்பது கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் தொல் திருமாவளவன் வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தப்படியாக அதிமுக வேட்பாளர் சந்திரகாசனுக்கு 30 முதல் 36 சதவீதமும், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி 15 முதல் 21 சதவீதம் , நாம் தமிழர் வேட்பாளர் ஜான்சிராணி 4 முதல் 7 சதவீதம் வரை பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் 1 முதல் 3 சதவீதம் என பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications