இனியும் தாமதிக்க கூடாது.. ஆளுநருக்கு காங். தலைவர் திருநாவுக்கரசர் கோரிக்கை
தமிழகத்தில் தற்போத பாஜகவின் பினாமி ஆட்சி நடப்பதாக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை : தமிழகம் தற்போதுள்ள சூழலில் தேர்தல் வர வேண்டும் என்று மக்கள் விரும்புவதாக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தற்போது முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆட்சி நடக்கிறது. ஆனால் இது அதிமுக அரசு போல இல்லை, தமிழகத்தில் தற்போது நடப்பது பாஜக பினாமி ஆட்சி தான்.

மக்கள் பிரச்னையில் அக்கறை காட்டாத இந்த அரசின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். தற்போதைய சூழலில் மக்கள் தேர்தல் வர வேண்டும் என்றே விரும்புகின்றனர்.
முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றுள்ளனர். இனியும் ஆளுநர் தாமதப்படுத்தாமல் முதல்வரை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் திருநாவுக்கரசர் கேட்டுக் கொண்டார்.
டி டி வி தினகரனை ஆதரிக்கும் எம் எல் ஏ க்கள்மீது கொரடா நடவடிக்கை எடுக்கமுடியாது. மக்களின் ஆதரவை இழந்த இந்த அரசு நீடிக்க க்கூடாது. உள்ளாட்சித்தேர்தல்நடத்தினால் தோற்றுவிடுவோம் என்ற பயம் காரணமாக தேர்தலைநடத்த தமிழக அரசு பயப்படுகிறது. குட்கா போதைப்பொருள்விவகாரத்தில் உரிமைக்குழுவிடம் ஆதாரத்தை தரேவண்டியகட்டாயம் இல்லை.












Click it and Unblock the Notifications