திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளதாக அரசிதழில் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி காலியாக உள்ளதாக தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. சீனிவேல் பதவியேற்கும் முன்னரே உடல்நலக் குறைவால் காலமாகிவிட்டார். இதனால் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளதாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதாக சட்டசபை செயலர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளின் தேர்தலையே தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
இத்தொகுதிகளுடன் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலும் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications