For Daily Alerts
Just In
அன்னதானம் சாப்பிட்ட 100 பேருக்கு வாந்தி, பேதி, மயக்கம்: திருவண்ணாமலை அருகே பரபரப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே அன்னதானம் சாப்பிட்ட 100 பேருக்கு வாந்தி, பேதி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருகே உள்ள ஆர்ப்பாக்கத்தில் தனியார் ஆலை சார்பில் அன்னதானம் வழங்கப் பட்டது. அதில், அந்த ஆலை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவருந்தினர்.
அன்னதானத்தில் சாப்பிட்ட சுமார் 100 பேருக்கு வாந்தி, பேதி மற்றும் மயக்கம் உள்ளிட்ட உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவர்கள் சிகிச்சைக்காக திருவண்ணாமலை மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர்.
அவர்களில் அதிக உடல்நலப் பாதிப்பு அதிகம் உள்ள 60 பேருக்கு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments
English summary
Near Tiruvanamalai 60 people were hospitalized after eating a free meal provided by a private cotton mill.
Story first published: Sunday, December 21, 2014, 12:09 [IST]