தமிழ்நாட்டில் இதே போல ஒரு வெற்றியை பாஜக பெறும் - தமிழிசை, எச். ராஜா
எதிர்கட்சிகளே இல்லாத அளவிற்கு நாடு முழுவதும் 21 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் இதே போன்றதொரு வெற்றியை பெறத்தான் பாஜகவின் தாமரை யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இனி வரக்கூடிய அனைத்து மாநில தேர்தல்களிலும் இந்த வெற்றியானது நிச்சயம் எதிரொலிக்கும் என்று தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.
பா ஜ க வின் வடகிழக்கு மாநிலங்கள் முன்னேற்ற திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்று தேசிய செயலாளர் எச். ராஜா பதிவிட்டுள்ளார்.
|
21 மாநிலங்களில் பாஜக ஆட்சி
இனி வரக்கூடிய அனைத்து மாநில தேர்தல்களிலும் இந்த வெற்றியானது நிச்சயம் எதிரொலிக்கும் என்று தமிழிசை சவுந்தராஜன் கூறியுள்ளார். 21 மாநிலங்களில் பாஜகவின் ஆட்சி நடைபெறுகிறது. இது சாதாராண வெற்றியல்ல சாதனை வெற்றி என்று தமிழிசை பதிவிட்டுள்ளார்.
மகத்தான வெற்றி
எதிர்கட்சி இல்லாத அளவில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் உள்ளது. திரிபுரா, நாகாலாந்து தேர்தலில் பாஜக மகத்தான வெற்றி பெற்றுள்ளதாக தமிழிசை தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வெற்றி
தமிழ்நாட்டில் இதே போன்றதொரு வெற்றியை பெறத்தான் பாஜகவின் தாமரை யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் யாத்திரையின் போதுதான் வெற்றியை கொண்டாடி வருகிறோம் என்றும் தமிழிசை கூறியுள்ளார்.
|
ஊழல் அகம்பாவம்
பா ஜ க வின் வடகிழக்கு மாநிலங்கள் முன்னேற்ற திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி. திரிபுராவில் மொத்தமுள்ள 20 தனித்தொகுதிகளையும் பாஜக கூட்டணி வென்றுள்ளது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்களின் தோல்விக்கு காரணம் அவர்களின் ஊழல் மற்றும் அகம்பாவமே. இனி கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஜேஎன்யூ வை மட்டுமே ஆளலாம் என்று கூறியுள்ளார் எச். ராஜா.