ஈழத் தமிழர் விவகாரம்- தியாகு உள்ளிட்ட 15 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம்
சென்னை: இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு தமது ஆதரவாளர்கள் 15 பேருடன் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று தொடங்கினார்.
ஈழத் தமிழர்களை கொடூரமாக கொன்று குவித்த சிங்கள அரசை, காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும், இந்திய அரசு இலங்கைக்கு போர்க்கப்பல் கொடுக்கும் திட்டத்தையும், கடலுக்கு அடியில் கம்பி வழியாக இலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தையும், கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தியாகு நேற்று மாலை முதல் தமது ஆதரவாளர்களுடன் காலவரையற்ற உண்ணாவிரதப்[ போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
இந்த போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தியாகுவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
முன்னதாக மெரினா கடற்கரையில் திருவள்ளுவர் சிலை அருகே உண்ணாவிரதம் இருக்க தியாகு அனுமதி கோரினார். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இந்த போராட்டத்துக்கு தியாகு அனுமதி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications