சிதம்பரத்தில் குண்டு வெடித்த வழக்கு: அண்ணாமலை பல்கலை. ஊழியர் உட்பட 3 பேர் கைது
சிதம்பரம்: சிதம்பரத்தில் குண்டுவெடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் உட்பட மூவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிந்து வருகிறார் அருள் பிரசாத். இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாரியப்பாநகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று இவரது வீட்டில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் மோகன்ராம் என்பவர் படுகாயமடைந்தார். மோகன்ராமை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்த அருள் பிரசாத் தனது நண்பருடன் தலைமறைவானார்.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அருள் பிரசாத்தின் வீட்டை போலீசார் சோதனையிட்டதில், அங்கிருந்து டிபன் பாக்ஸ் குண்டு, 6 துப்பாக்கிகள், அரிவாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர்.
போலீசாரின் தேடுதல் வேட்டையில் அருள் பிரசாத் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் வெடிகுண்டு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
அதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய, பட்டாபி, சந்தோஷ் ஆகிய இருவரை தனிப்படை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications