வேலூர் அருகே தோல் தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
Subscribe to Oneindia Tamil
வேலூர் அருகே தோல் தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வேலூர்: ராணிப்பேட்டை சிப்காட்டில் தோல் தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் உள்ள சிப்காட் பகுதியில் ஏராளமான நிறுவனங்கள் இயங்கி வருகின்றனர். அங்குள்ள தோல் தொழிற்சாலை ஒன்றில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக தொழிற்சாலையின் இயந்திரத்தில் சிக்கி ஜெய்சங்கர், ராஜேந்திரன், அருண் ஆகிய 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இவர்கள் மூவரும் சிப்காட் வஉசி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
தகவலறிந்து வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இயந்திரத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications