For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துறையூர் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவிகள் தற்கொலை முயற்சி : ஆசிரியர் திட்டியதால் விபரீதம் !

Google Oneindia Tamil News

திருச்சி: துறையூர் பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த 10ம் வகுப்பு மாணவிகள் இருவர் எறும்பு மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துறையூரில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார் ஆசிரியர் வனிதா. இவர் கடந்த ஆறு மாதங்களாக அப்பள்ளி மாணவிகளை கடுமையான வார்த்தைகளால் திட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.

Thuraiyur: Two students tried to commit suicide

இதனால், மனமுடைந்த இரண்டு பத்தாம் வகுப்பு மாணவிகள் இன்று வகுப்பறையில் எறும்பு மருந்தை சாப்பிட்டு மயக்கமடைந்தனர். உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. மாணவிகளின் தற்கொலை முயற்சி தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த மாணவிகள் தற்கொலைக்கு முயற்சித்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
In Thuraiyur, tenth standard girl students tried to commit suicide by eating poison. The girls were frustrated by their teacher's harassment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X