திபெத் எழுச்சி நாள்: சென்னை, டெல்லியில் திபெத்திய மாணவர்கள் போராட்டம் – கைது
சென்னை: திபெத் நாட்டின் விடுதலையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
திபெத் நாட்டை சீன ராணுவம் 1959ஆம் ஆண்டு மார்ச் 10ஆம்தேதி அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்துக் கொண்டது. இதை கண்டித்து திபெத்தில் நடந்த விடுதலைப் போராட்டங்கள் தோல்வியில் முடிந்தன.

இந்த நிலையில் வெளி நாடுகளில் உள்ள திபெத் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 10ஆம்தேதியை எழுச்சி நாளாக கடைபிடித்து வருகிறார்கள்.
சென்னையில் வசிக்கும் திபெத்திய மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களின் கோரிக்கையை வலியுறுத்திய அவர்கள், திபெத் பிரச்னையில் ஐ.நா. சபை தலையிட்டு தீர்வு காண வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள திபெத்திய அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தலாய்லாமா நீண்டநாட்கள் வாழவேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
போராட்டங்களின்போது காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும். திபெத்தியர்களைக் கொல்லக் காரணமாக இருந்த சீனத் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

1959ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி திபெத்தை சீனா ஆக்கிரமித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆண்டுதோறும் மார்ச் 10ஆம் தேதி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.
திபெத்தை விடுதலைப் போராட்டத்தில் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இப்போராட்டம் காரணமாக பல ஆயிரம் குடும்பங்கள் தங்களது இருப்பிடத்தையும், உறவினர்களையும் விட்டு வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றன என்று தெரிவித்தனர்.

டெல்லியில் மாணவர்கள்
டெல்லியில் உள்ள சீன தூதரகம் முன்பு இன்று காலை திபெத் மாணவ-மாணவிகள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது டெல்லி போலீசாருக்கும், திபெத் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கைகலப்பில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications