தமிழகத்தில் பிறந்ததாகவே எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்: தருண்விஜய் பெருமிதம்
சென்னை : தமிழகத்தில் பிறந்ததாகவே எண்ணி மகிழ்ச்சியடைவதாக, உத்தரகாண்டில் பிறந்த பாஜக எம்.பி. தருண் விஜய் தெரிவித்துள்ளார்.
திருக்குறளை உலக அளவில் எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் பாஜக எம்.பி. தருண் விஜய். இந்நிலையில், புதுவையை சேர்ந்த பாக்கியராஜ் திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு என்ற குறும்படத்தை தயாரித்துள்ளார்.
சுமார் ஒரு மணி நேரம் ஓடும் இந்த குறும்பட வெளியீட்டு விழா புதுவையில் நடைபெற்றது. இதில் உத்திரகாண்ட் மாநில பாஜக எம்.பி. தருண் விஜய் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-
உத்தரகாண்டில் பிறந்தநான் தமிழகத்தில் பிறந்ததாகவே எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். எந்த சமூகம் தங்களது மொழி, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை பாதுகாத்து அதன் வழியில் செயல்படுகிறதோ அந்த சமூகமே நிலைத்திருக்கும். அதனை மறந்துவிடும் சமுதாயம் வீணாகிவிடும்.
இந்த குறும்படத்தை டெல்லிக்கு எடுத்துச்சென்று இந்தி உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட நடவடிக்கை எடுப்பேன். திருக்குறளை நாடு முழுவதும் கொண்டு சென்றிட பாராளுமன்றத்தில் பேசி வலியுறுத்துவேன். நாட்டில் துளசிதாசர், வால்மீகியை மட்டும் போற்றினால் போதாது. திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசனையும் போற்றுவதே முழுமையாக அமையும்.
உலகம் முழுவதும் பரவியுள்ள தீவிரவாதத்தை திருக்குறளின் கருத்துகள் மூலமே ஒழிக்க முடியும். திருக்குறளின் கருத்துகளை வடஇந்தியாவில் உள்ள 500 பள்ளி, கல்லூரிகளில் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசும் இதற்கு உதவி புரியும்.
திருவள்ளுவர் இந்தியா முழுமைக்கும் சொந்தமானவர். நம் நாட்டில் மேல்தட்டு மக்கள், கீழ்தட்டு மக்கள் மற்றும் சாதி, மத வேறுபாடுகள் உள்ளது. ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் வேண்டும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். மக்களை ஏற்றத்தாழ்வோடு நடத்துவது திருக்குறளை பின்பற்றுவதற்கு அர்த்தமில்லாமல் போய்விடும். இதற்காக பொங்கல் விழாவினை ஒரு ஆதிதிராவிடர்கள் கிராமத்தில் தங்கி கொண்டாட போகிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications