நெல்லையில் இரட்டைக் கொலையால் பதட்டம்: போலீஸ் குவிப்பு
நெல்லை: நெல்லை டவுனில் நேற்று இரவு 2 பேர் வெட்டி கெ்லை செய்யப்பட்டதால் அங்கு பதட்டம் நிலவுகிறது. இதனால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை டவுன் பாறையடியை சேர்ந்தவர் சண்முகம். அதே பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இருவரும் கட்டிட தொழிலாளிகள். பாறையடி தெருவில் வசித்து வந்த மாரியப்பன் கடந்த சில மாதங்களாக பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

இந்நிலையில் சண்முகம் மற்றும் மாரியப்பன் ஆகியோர் ராஜ்குமார் என்பவரை அழைத்துக் கொண்டு டவுன் பஜாரில் பொருட்கள் வாங்க நேற்று இரவு சென்றுள்ளனர். வெஸ்டர்ன்ஸ் தண்ணீர் பாக்ஸ் வாங்கி விட்டு ஒரே பைக்கில் 3 பேரும் பாறையடி தெருவுக்கு திரும்பியுள்ளனர்.
டவுன் சாலியர் தெருவில் மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது பைக்கில் வந்த 3 பேர் அவர்களை வழி மறித்துள்ளனர். அவர்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் 3 பேரையும் சரமாரியாக வெட்டத் தொடங்கினர். இதில் ராஜ்குமார் மட்டும் வெட்டப்பட்ட கையோடு தப்பி ஓடினார்.
மற்ற இருவரும் வெட்டு காயங்களோடு பைக்கில் இருந்து சரிந்து விழுந்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர்கள் அந்த இடத்திலேயே பலியாகினர். பைக்கில் அரிவாளோடு வந்த 3 பேரும் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். தகவல் அறிந்ததும் பாறையடி தெரு மக்கள் சாலியர் தெருவில் குவிந்தனர்.
இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறினர். இதனால் அந்த தெருவில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடைகளும் அடைக்கப்பட்டன. கொலையான சண்முகத்திற்கு பேச்சியம்மாள் என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். மாரியப்பனுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த கொலையால் அங்கு பதட்டம் நிலவுகிறது. இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications