இன்று கூடுகிறது சட்டசபை.. ரோசய்யா உரையுடன்.. எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கலாம்!
சென்னை: தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் இன்று ஆளுநர் கே.ரோசய்யாவின் உரையுடன் தொடங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நடைபெறும். முதல் கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டத்தில் மாநில ஆளுநர் உரையாற்றுவார். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று நடக்கும் முதல்நாள் கூட்டத்தில் காலை 11.15 மணிக்கு கே.ரோசய்யா உரையாற்றுகிறார்.

உரை நிகழ்த்துவதற்காக கே.ரோசய்யா இன்று காலையில் சட்டசபைக்கு வருவார். அவரை மரபுப்படி சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் வரவேற்று சட்டசபைக்குள் அழைத்து வருவார்கள். அங்குள்ள சபாநாயகர் இருக்கையில் ரோசய்யாவை அமர வைப்பார்கள். அதைத் தொடர்ந்து ஆளுநர் உரை நிகழ்த்துவார்.
ஆளுநர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தி முடிந்த பிறகு அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் ப.தனபால் வாசிப்பார். அதைத் தொடர்ந்து அவை நிகழ்ச்சிகள் முடிக்கப்படும். பின்னர் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடத்தப்படும். இந்த கூட்டத்தொடரில் எத்தனை நாட்கள் சட்டசபையை நடத்துவது? என்பது பற்றி இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
நாளை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதன்மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதம் நடைபெறும். அலுவல் ஆய்வுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சில நாட்கள் விவாதம் நடத்தப்பட்டு இறுதி நாளில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்து உரையாற்றுவார்.
டெங்கு காய்ச்சல், ராணிப்பேட்டை கழிவுநீர் தொட்டி உடைந்து 10 பேர் இறந்த சம்பவம், தமிழக அரசின் திட்ட செயல்பாடுகள் போன்ற பல பிரச்சினைகளை இந்தத் தொடரில் எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கலாம். இன்றைய ஆளுநர் உரையை திமுக புறக்கணிக்கலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications