தமிழகத்தில் 2 நாட்களில் 1,300 கோடி ரூபாய் டெபாசிட்: ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகத்தில் 2 நாட்களில் 1,300 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கியின் தென்மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா கூறியுள்ளார்.

ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்றும் அவற்றை டிசம்பர் 30ம் தேதிவரை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் கடந்த 8ம் தேதி மோடி அறிவித்தார்.

TN Banks get Rs 1,300 crore deposits in 2 days

ஒருநாள் விடுமுறைக்குப் பின்னர் நவம்பர் 10ம் தேதி வங்கிகள் திறக்கப்பட்டன. வங்கி திறந்த உடனேயே பணத்தை மாற்றவும், டெபாசிட் செய்யவும் மக்கள் குவிந்தனர்.

வங்கிகளில் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் வங்கிகளில் விநியோகிக்கப்பட்டு வருவதால் மக்கள் நீண்ட வரிசையில் வங்கிகளில் காத்திருந்து தங்கள் பணத்தை மாற்றிச் செல்கின்றனர்.

ஏடிஎம்களில் ரூ.4000, வங்கிகளில் ரூ.10000க்கு மேல் பணத்தை எடுக்க முடியாது என்பதால் பலர் தங்கள் பணத்தை டெபாசிட் செய்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் 2 நாளில் மட்டும் ரூ.1,300 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் தென்மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மட்டும் ரூ.1,300 கோடிக்கு பொதுமக்கள் டெபாசிட் செய்துள்ளனர். வங்கிகளில் மாற்றப்பட்ட பழைய நோட்டுக்கள் எவ்வளவு என்பது வரும் 14ம் தேதி தெரியும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் புழக்கத்தில் உள்ள 2,300 கோடி அளவிலான பழைய நோட்டுக்கள் அழிக்கப்படும் என்றும் சதக்கத்துல்லா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+