தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கிறது சிக்கல்- 14ல் தான் வேட்பாளர் பட்டியல்: இல. கணேசன்
சென்னை: பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியில் சில தொகுதிகளை முக்கிய 2 கட்சிகளும் கேட்டு வருவதால் சிக்கல் நீடிக்கிறது என்றும் வரும் 14-ந் தேதியன்று பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அக்கட்சி மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலுக்காக பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக ஆகியவை இடம்பெற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இரண்டு கட்சிகளும் தங்களுத்தான் வேண்டும் என்று பல தொகுதிகளை கேட்டு அடம்பிடித்து வருகிறது.
இதனால் அந்த கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியல் வரும் 14-ந் தேதி வெளியிடப்படும்.
கூட்டணியில் இடம்பெற்றுள்ள இரண்டு முக்கியக் கட்சிகள் ஒரே தொகுதியை கேட்டு வலியுறுத்துவதால்தான் தொகுதி பங்கீட்டில் தாமதம் நீடிக்கிறது. இந்த சிக்கல் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications