டெல்லி பலாத்காரம் எதிரொலி: கால் டாக்ஸி டிரைவர்களுக்கு சென்னை போலீஸ் கிடுக்கிப்பிடி!
சென்னை: டெல்லியில் கால்டாக்ஸியில் பயணித்த இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக, சென்னையில் வாடகை கார் நிறுவனங்களுக்கும், டிரைவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் மாநகர காவல்துறை விதித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லியில் உபேர் நிறுவனத்திற்கு சொந்தமான கால்டாக்ஸியில் பயணம் செய்த, நிதி நிறுவன பெண் ஊழியர் ஒருவர் ஓட்டுநரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தையொட்டி, சென்னையில் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு காவல்துறை கடும் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வாடகை கார் அதிபர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு மேற்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
டிரைவர்களின் பின்னணி
ஓட்டுநர்களை வேலைக்கு எடுக்கும்போது, அவர்கள் குற்றப்பின்னணி உள்ளவர்களா, இல்லையா என்பதை எடுத்துக்காட்டும் காவல்துறை சரிபார்ப்பு சான்றிதழை வாங்கி பார்த்துதான், வேலைக்கு எடுக்க வேண்டும்.
காவல்துறை சரிபார்ப்பு சான்றிதழ் இல்லாமல், ஓட்டுநர்களை வேலைக்குச் சேர்க்கக்கூடாது என்று வாடகை கார் நிறுவனங்களுக்கு காவல்துறை அறிவுரை வழங்கி உள்ளது.
போதையில் இருந்தால்...
மேலும் போதையில் கார் ஓட்டிய ஓட்டுநர்கள், ஒரு முறை காவல்துறையினரிடம் சிக்கினால் கூட, அவர்களுக்கு கண்டிப்பாக மீண்டும் வேலை கொடுக்கக்கூடாது என்றும் வாடகை கார் நிறுவனங்களுக்கு காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
சோதனை அவசியம்
இரவு நேரத்தில் சாலைகளில் செல்லும் வாடகை கார்களை கண்டிப்பாக சோதனை போட வேண்டும் என்றும், போக்குவரத்து காவலர்களுக்கு உயர் அதிகாரிகள் கண்டிப்பான உத்தரவு போட்டுள்ளனர்.
நடவடிக்கை அவசியம்
சோதனையின்போது, வாடகை கார் டிரைவர்கள் போதையில் இருந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications