For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிகலாவுக்கு சிறை... மக்கள் இனிப்பு கொடுத்து கொண்டாட்டம்!! வெடிவெடித்து உற்சாகம்!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் அதனை தமிழக மக்கள் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இனிப்பு கொடுத்து கொண்டாடி வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலாவுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உட்பட தமிழக மக்கள் அனைவரும் உற்சாகமடைந்துள்ளனர். அவர்கள் இனிப்புகளை வழங்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக சுப்ரிம் கோர்ட் இன்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்துள்ளது. இதனால் தமிழக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

TN erupts into joy

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக அடிமட்ட தொண்டர்கள் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்ப் பேட்டை உட்பட மாநகர் முழுவதும் மக்கள் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். பல இடங்களில் வெடி வெடித்தும் மக்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

English summary
Tamil Nadu has burst into joy after the DA case verdict, in which Sasikala was convicted.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X