For Daily Alerts
Just In
தமிழக விவசாயிகள் டெல்லி பயணம்: நாடாளுமன்றம் முன்பாக மார்ச் 26-ல் போராட்டம்
தமிழக விவசாயிகள் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
Recommended Video
தமிழக விவசாயிகள் டெல்லி பயணம்
சென்னை: தமிழக விவசாயிகள் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டனர். அவர்கள் நாடாளுமன்றம் முன்பாக 26-ஆம் தேதி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்களும் 15 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த கெடு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழக விவசாயிகள் இன்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.
பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 100 விவசாயிகள் நாளை மறுதினம் காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தவுள்ளனர்.
English summary
Tamilnadu farmers go to Delhi to demand Cauvery Management board on March 26.