5 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக மீனவரை படுகொலை செய்த சிங்கள கடற்படை !
ராமேஸ்வரம்: 5 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை கடற்படை நடத்திய வன்முறை வெறியாட்டத்திற்கு மீனவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒரு மீனவர் படுகாயம் அடைந்தார்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. அத்துடன் மீனவர்களின் வலைகளை அறுத்து, படகுகளையும் சேதப்படுத்தி விடுகின்றனர். இதனால் மீனவர்கள் மிகுந்த அச்சத்துடன் மீன்பிடிக்கச் செல்கின்றனர். இதுகுறித்து இருநாட்டு அரசிடம் பலமுறை வலியுறுத்தியும் நிரந்தர தீர்வு காணப்படவில்லை.

அண்மையில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அப்போது எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று இலங்கை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இருப்பினும் சிங்கள கடற்படை தாக்குதல்களை தொடர்ந்து கொண்டேதான் உள்ளது.
இந்நிலையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய எல்லைக்குள்ளே இலங்கை கடற்படை சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்சோ என்ற மீனவர் பலியாகினார். மேலும் ஒரு மீனவர் படுகாயம் அடைந்தார்.
முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காரைக்காலை சேர்ந்த மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பிறகு படுகொலைகள் நடைபெறாமல் இருந்தது. இருப்பினும் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்துவதும் வலைகளை சேதப்படுத்துவதையும் இலங்கை கடற்படை செய்து வந்தது.
இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ளது இலங்கை கடற்படை. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் இரவோடு, இரவாக கரைக்கு திரும்பி வருகின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளில் 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதலுக்கு பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களுக்கு மத்திய, மாநில அரசு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications