சர்வதேச முதலீட்டாளர் மாநாடு ஒத்தி வைப்பு: ஒதுக்கிய ரூ.100 கோடி எங்கே?- கேட்கிறார் ஸ்டாலின்
சென்னை: சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டதற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநாட்டிற்காக செலவிடப்பட்ட 100 கோடி ரூபாய் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
TN GIM. Govt should present white paper - who promised 76k cr, where has 100cr been spent? Will TN GIM ever happen?
— M.K.Stalin (@mkstalin) April 21, 2015 இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டதற்கான காரணத்தை தமிழக முதலமைச்சர் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
TN GIM postponed to Sept - for the third time. CM should give real reason for postponement despite big hype & supposed investments.
— M.K.Stalin (@mkstalin) April 21, 2015 தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் தொழிலாளர்கள் மத்தியில் நம்பிக்கை குறைந்துள்ளதாகவும், சர்வதேச அளவில் தமிழகத்தின் மதிப்பு குறைந்து விட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ள அவர், மாநாட்டிற்கு செலவிடப்பட்ட 100 கோடி ரூபாய் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications