சிறுவாணியை தூர் வாரும் தமிழக அரசு.. யாரோடு கை கோர்க்கப் போகிறது பாருங்கள்!
கோவை மாவட்டத்தில் உள்ள சிறுவாணி அணையை தூர்வார முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை: சிறுவாணி அணையை பெரும் சர்ச்சைக்குரிய ஈஷா யோகா மையத்துடன் இணைந்து தூர்வாரும் பணியை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
கோவையில் தொழில்துறையினருடன் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜி.எஸ்.டி மசோதா தொடர்பாக தொழில்துறையினர் ஜூன் 1-ம் தேதி தமிழக நிதியமைச்சரை சந்திப்பார்கள் என்றார். மேலும் ஜூன் 2ம் தேதி தொழில்துறையினர் இது தொடர்பாக முதல்வரை சந்தித்து தங்களது கருத்துகளை தெரிவிக்க உள்ளதாகக் கூறினார்.

கோவை மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்கும் விதமாக சிறுவாணி அணையில் தூர் வாருவது குறித்து பரிசீலித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். "இது கேரள அரசும் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் அவர்களிடமும் கருத்து கேட்டுள்ளோம், ஈஷா யோகா மையத்துடன் கை கோர்த்து இந்தப் பணியை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது" என்றார்.
சிஸ்டம் கெட்டுப் போச்சு என்று நடிகர்கள் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் தொடர்ந்து கூறி வருவது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் "தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது, சட்டம் ஒழுங்கு நல்ல நிலையில் உள்ளது. மற்ற மாநிலங்களில் தற்போதுள்ள தமிழக சூழல் இருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும் ஆனால் தமிழகத்தில் அப்படி எந்த அசம்பாவிதமும் இல்லை. ஏன் சொல்லப்போனார் தமிழகத்தில் உள்ள நடிகர்களுக்கும் நாங்கள் சிறப்பான பாதுகாப்பை அளித்து வருகிறோம்" என்றும் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications