கருணாநிதிக்கு மெரினாவில் இடம்... தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை இதோ...

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருணாநிதியின் விருப்பப்படி அவரை அண்ணா சமாதியின் பக்கத்தில் சமாதி அமைக்க வேண்டும் என்று திமுக சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

TN government is not going to appeal against Chennai HC order

இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து திமுக நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கு விசாரணை நேற்று இரவு முதல் நடந்து வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரனுக்கு மெரினாவில் இடம் ஒதுக்க அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி மறுத்துவிட்டார்.

காமராஜர், பெரியார் உள்ளிட்டோருக்கு மெரினாவில் இடம் இல்லை. அப்படியிருக்கும் போது கருணாநிதிக்கு மட்டும் எப்படி இடம் அளிக்க முடியும் என்று வாதாடினார்.

மேலும் சில உதாரணங்களை எதிர்தரப்பும் முன் வைத்தது. இறுதியில் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் வழங்க ஹைகோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ஹைகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தொண்டர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+