கஜா புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு அரசு முழுமையாக உதவவில்லை.. கமல் தாக்கு
கொடைக்கானல் : கஜா புயலால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு அரசு அதிகாரிகள் செல்லவே இல்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் குற்றம்சாட்டி உள்ளார்.
கஜா புயலால் கொடைக்கானலில் பல்வேறு மரங்கள் சாய்ந்த நிலையில் வீடுகளின் மேற்கூரைகளும் சேதம் அடைந்தன. இந்நிலையில் புயல் சேதங்களை நாகை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு மக்கள் நீதி மய்ய நிறுவனரும், நடிகருமான கமலஹாசன் நேரிடையாக சென்று பார்வையிட்டு வேண்டிய உதவிகளை செய்து வருகிறார்.
அதன் ஒருபகுதியாக அவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பார்வையிட்டார். பின்னர் பெருமாள்மலை பகுதிக்குச் சென்றார். அங்கு பாதிப்புகளை பார்வையிட்ட பின்னர் அப்பகுதி மக்களிடம் உரையாடிய அவர், பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

யாரும் வரவில்லை
அப்போது கூடியிருந்த மக்கள் புயலால் விழுந்திருக்கும் மரங்களை அப்புறப்படுத்த யாரும் வரவில்லை என்று வேதனை தெரிவித்தனர்.

காபி, வாழை பாதிப்பு
அதன்பின்னர், குருசரடி எனும் பகுதியில் காபி, வாழை மர விவசாயிகளை சந்தித்தார். அப்பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவினால் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக கமலிடம் மக்கள் தெரிவித்தனர்.

கவலையுடன் பேசிய தள்ளுவண்டிப் பெண்
அப்போது, அந்த பகுதியில் தள்ளுவண்டியில் பழங்கள் விற்று கொண்டிருக்கும் விஜயலட்சுமி என்பவர், கமலஹாசனை சந்தித்தார். அண்மையில் ஏற்பட்ட கஜா புயலினால் தமது வண்டி சேதமடைந்து, வாழ்வையும் இழந்து தவிப்பதாக கவலையுடன் கூறினார்.

அதிகாரிகள் போகவே இல்லை
அதன் பின்னர் கமலஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், புயலால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு அரசு அதிகாரிகள் செல்லவே இல்லை என்பதை இந்த மக்களை பார்த்த பிறகு தெரிகிறது.

உதவி செய்ய வேண்டும்
அவர்கள் ஏன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஏன் செல்லவில்லை என்று தெரியவில்லை. எது எப்படி இருப்பினும், அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்ய வேண்டும் என்றார் கமல்ஹாசன்.
-
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications