எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: ஜன.17ல் பொது விடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு!
எம்.ஜி.ஆர்.பிறந்தநாளையொட்டி ஜனவரி 17-ம்தேதி பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 100-வது பிறந்தநாளையொட்டி ஜனவரி 17- ஆம் தேதிக்கு பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த தினம் 17ஆம் தேதியன்று வருவதால் பொது அரசு விடுமுறை விட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: எம்.ஜி. ராமசந்திரனின் 100 வது பிறந்த நாளான ஜனவரி 17-ம் தேதி தமிழக அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், மாநில பொதுத்துறை நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், உள்ளாட்சி அதிகார அமைப்புகள், கூட்டுறவு வங்கிகள் உள்பட அனைத்து வங்கிகள், அரசு வாரியங்கள் உள்ளிட்டவற்றிற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்படும். தனியார் நிறுவனங்கள் ஜனவரி 17 ம் தேதி விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜனவரி 17 ம் தேதி பொது விடுமுறை ஆனதால் தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும். கடந்த மாதம் டிசம்பர் 6ஆம் தேதி ஜெயலலிதா மறைவினை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பொது விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications