For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்! - தமிழிசை சௌந்தர்ராஜன்

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

TN Govt must ensure the security of women - Tamilzhisai

ஒருதலைக் காதல் விவகாரத்தில் கரூரில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த பெண் ஒருவர் வகுப்பறையிலேயே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.

பெண்கள் தங்களின் விருப்பத்துக்கு எதிரான விருப்பங்களை நிராகரிப்பதற்குகூட உரிமை மறுக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் 2014-ல் 945-ஆக இருந்தது. அது தற்போது 1,483-ஆக ஆகியுள்ளது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது.

குற்றச் சம்பவங்களுக்கு சிறார்கள் கேடயமாகப் பயன்படுத்தப்படுகின்றனர். இத்தகைய சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தை பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக மாற்றுவது அரசின் கடமை," என்று தமிழிசை கூறியுள்ளார்.

English summary
Tamil Nadu BJP President Tamizhisai Soundarrajan urged TN govt to ensure the security of women.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X