For Daily Alerts
Just In
மோடியை அடிக்கடி சந்தித்ததால்தான் தமிழகத்துக்கு நலத்திட்டங்கள் கிடைத்தன- முதல்வர் எடப்பாடி
பிரதமர் நரேந்திர மோடியை அடிக்கடி சந்தித்ததால்தான் தமிழகத்துக்கு நலத்திட்டங்கள் கிடைத்தன என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
திருவாரூர்: மத்திய அரசுடன் இணக்கமாக இருந்ததால்தான் தமிழகத்துக்கு நலத்திட்டங்கள் கிடைத்துள்ளன என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவாரூரில் ஒரு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். திருவாரூர் மாவட்ட சிறப்புகளை குறிப்பிட்டு புகழாரம் சூட்டிய அவர் தனது உரையை தொடர்ந்தார்.
அப்போது அவர் பேசுகையில், மோடியை அடிக்கடி சந்தித்ததால்தான் தமிழகத்திற்கு நலத்திட்டங்கள் கிடைத்தன. தமிழகத்திற்கு எத்தனை வீடுகள் வேண்டுமானாலும் கட்டித்தர மோடி உறுதியளித்தார்.
மோடியை அடிக்கடி சந்தித்ததால்தான் தமிழகத்திற்கு இந்த உறுதிமொழி கிடைத்தது. வீடுகட்டும் திட்டத்தில் தமிழகம்தான் அதிக பலனை பெறப்போகிறது என்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
Comments
English summary
Continuous visits of PM Narendra Modi results tamilnadu gets developmental projects, says CM Edappadi Palanisamy.
Story first published: Saturday, August 19, 2017, 18:28 [IST]