இல்லாததை இருப்பது போல காட்டுகிறது ஓ.பிஎஸ் அணி...அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளாசல்
மதுரை : ஓ.பன்னீர்செல்வம் அணி இல்லாத ஆதரவை இருப்பது போல காட்டுவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிமுகவின் பிளவுபட்ட இரண்டு அணிகளான ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி அணி இணைப்புக்கான பேச்சுவார்த்தை தீயை அணைத்து விட்டு அடுத்ததாக கட்சியின் பலத்தை கூட்ட ஆதரவாளர்களை நேரில் அணுகும் பரீட்சைக்கு தயாராகி வருகிறது.

இரு அணிகளும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினால் பிரச்னை தீர்ந்து விடும் என்று முதல்வர் பழனிசாமி அணியினர் இன்று வரை கூறி வருகின்றனர். ஆனால் நாங்கள் எங்கள் வழியை பார்த்துக் கொள்கிறோம் என்கிற ரீதியில் மே தின கூட்டத்தின் போது பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தினககரனும், பழனிசாமியும் ஒன்றாக இருக்கும் போது இவர்களுடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்தி ஒன்று பட்டு செயல்பட முடியும் என்றார்.
இதனால் இருஅணிகள் இணையாது என்றே தொண்டர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் மதுரையில் ஜெ. பேரவைசார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுகவிடம் எல்லாம் இருக்கும்போது யாரிடமும் பிச்சை கேட்க வேண்டியதில்லை. தன்னிடம் இல்லாததை இருப்பதாக காட்டிக்கொண்டு ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மிரட்டி வருவதாகவும் அவர் கூறினார்.
நாங்கள் தான் அதிமுக
123 எம்எல்ஏக்கள், 38 எம்.பிக்கள்,மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் என அனைவருமே தங்கள் அணியில் உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், இப்படை தோற்கின் எப்படைவெல்லும் என்றும் வினவினார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் திண்டுக்கலில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசும் போதும் ஓ.பன்னீர்செல்வம் அணியை வறுத்தெடுத்திருந்தார் அமைச்சர் சீனிவாசன்.
துரோகம்
தாங்கள்தான் உண்மையான அதிமுக என்று தொடர்ந்து கூறி வரும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், இரட்டை இலை சின்னத்தை முடக்கிய போது கொண்டாட்டத்தில் ஈடுபட்டது யார் என்றார். எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்தால், இறைவன் தண்டனை எப்படி இருக்கும் என்பதை நிச்சயம் பார்க்கலாம் என்றும் அப்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருந்தார்.
-
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
170... திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக! லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications