ஆடிட்டர் குருமூர்த்தியை துக்ளக் சோவுடன் ஒப்பிடக் கூடாது: அமைச்சர் கடம்பூர் ராஜூ
ஆடிட்டர் குருமூர்த்தியை துக்ளக் சோவுடன் ஒப்பிடக் கூடாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி: ஆடிட்டர் குருமூர்த்தியை துக்ளக் சோவுடன் ஒப்பிடக் கூடாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளதற்கு கோவை ஆர்.எஸ்.புரம் மற்றும் சென்னை கே.4 காவல் நிலையம் விருது பெற்றதே சான்று. கடந்த 2011 முதல் தற்போது வரை தமிழகத்தில் சாதி, மத ரீதியாக எவ்வித மோதல்கள் இல்லமால் உள்ளது.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது. குரூமூர்த்தி தெரிவித்த கருத்து அவருடைய கருத்து.
மறைந்த சோவின் நிலைப்பாடு வேறு, குரூமூர்த்தி நிலைப்பாடு வேறானது; குரூமூர்த்தி கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து, அவரது கருத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டியதில்லை.
ஆனால் சோ சிறந்த கலைஞர், சிறந்த அரசியல் விமர்சகர், எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் நல்ல நட்பு கொண்டவர், தமிழக அரசியல் குறித்து தெரிந்தவர், அவரையும் மற்றவர்களையும் ஒப்பிட்டு பார்க்க முடியாது.
இவ்வாறு கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications