அத இடிச்சா என்ன.. ஆந்திராவில் கட்டுகிறேன் பார் பிரமாண்ட திருமண மண்டபம்.. பலே புள்ளிவிவரத் தலைவர்
சென்னை: புள்ளிவிவரத் தலைவர் ரொம்ப விவரமானவர் போலத்தான் தெரிகிறது. காசே இல்லை என்று கட்சியினரிடம் கஞ்சப்பாட்டு பாடி தேர்தல் நிதி வசூலித்துத் தர வேண்டும் என்று ஸ்டிரிக்ட்டாக கூறி வரும் அவர் ஆந்திரா பக்கம் மிக பிரமாண்டமான திருமண மண்டபம் ஒன்றை பெரும் பொருட் செலவில் சத்தம் போடாமல் கட்டி வருகிறாராம்.
இவரது திருமண மண்டபத்தை மேம்பாலத்திற்காக முன்பு கையகப்படுத்தி இடிக்க முயன்றபோது பெரும் பிரச்சினை செய்தவர் இவர். பின்னர் கையகப்படுத்தியது போக மீதமுள்ள திருமண மண்டபத்தில்தான் இப்போது கட்சி ஆபீஸை நடத்தி வருகிறார்.
கட்சிக்கு நிதி சேர்க்க வேண்டும், தேர்தல் செலவுகளை நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கட்சியினரிடம் கறாராக கூறுபவரும் கூட.
இந்த நிலையில்தான் தமிழகத்திலிருந்து ஆந்திரா செல்லும் சாலையில் உள்ள ஒரு ஊரில், பல ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தில் மிக பிரமாண்ட அளவில் திருமண மண்டபம் கட்டியுள்ளாராம்.
இதன் திறப்பு விரைவில் நடைபெற உள்ளதாம். திருமண மண்டபத்தை சத்தம் போடாமல் கட்டியிருந்தாலும் கூட திறப்புவிழாவுக்கு கட்சியினரை அழைத்து முறைப்படி சொல்லும் திட்டம் வைத்திருக்கிறாராம் தலைவர்.
அந்தப் பக்கம் பாலம் கட்ட வழியிருக்கான்னு ஆளுங்கட்சியில் யோசிக்காமல் இருந்தால் சரித்தான்..