முஸ்லீம்களுக்கு 10% இடஓதுக்கீடு கோரி தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் தீர்மானம்
திருச்சி: சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா ஆணையங்களின் பரிந்துரைப்படி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த அமைப்பின் சார்பில் ஷிர்க் ஒழிப்பு (மூடநம்பிக்கை எதிர்ப்பு) மாநாடு திருச்சியில் நேற்று நடைபெற்றது. மாநிலப் பொதுச் செயலாளர் முகமது யூசுப் தலைமை வகித்தார். நிறுவனர் ஜெய்னுல் ஆபிதீன், மாநில உயர்நிலைக் குழுத் தலைவர் சம்சுல் லுஹா, செயலாளர்கள் அப்துல் ரகுமான், தொண்டி சிராஜுதீன், தலைவர் அல்தாபி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பேசினர். இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மாநில துணைப் பொதுச் செயலாளர் தவ்பீக் தீர்மானங்களை வாசித்தார்.

புதுச்சேரி சட்டசபையில் முஸ்லிம்களுக்கு 6.1 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா ஆணையங்களின் பரிந்துரைப்படி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். நாடு முழுவதும் புதிதாக மத்திய பல்கலைக்கழகங்களை சிறுபான்மையினருக்காக ஏற்படுத்த வேண்டும். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய் யும் முடிவைக் கைவிட வேண்டும்.

தீபாவளி, பொங்கல் பண்டிகைக ளின்போது பொதுமக்களுக்கு அரசு சலுகைகள் வழங்குவதுபோல, முஸ்லிம் பண்டிகைகளின்போதும் சலுகைகளை வழங்க வேண்டும். 12 ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை, வரும் தேர்தலுக்குள் நிறைவேற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மூடநம்பிக்கைகளை விளக்கும் வகையில் மாநாட்டுத் திடலில் கண்காட்சியும் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications