“ஆபரேஷன் திரிசூலம்” வெற்றியைக் கொண்டாடும்... தேசிய கடற்படை தினம் இன்று!
கடந்த 1971ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போரில், பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்களை மூழ்கடித்த, ஆபரேஷன் திரிசூலத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 4ஆம் தேதி கடற்படை தினமாக கொண்டாடப்படு
சென்னை: தேசிய கடற்படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.
இந்திய படைகளுள் மிக முக்கியமான ஒன்று கடற்படை. நாட்டின் கடல் எல்லைகளை காப்பதுடன், இப்படை சர்வதேச உறவுகளை மேம்படுத்துதல், துறை முகங்களைப் பார்வையிடுதல், பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட பல மனிதாபிமானச் செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறது.
ஆண்டுதோறும் டிசம்பர் 4ம் தேதி தேசிய கடற்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆபரேஷன் திரிசூலம்...
கடந்த 1971ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றபோது, ஆபரேஷன் திரிசூலம் மற்றும் மலைப்பாம்பு மூலம் பாகிஸ்தானின் கடற்படை கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ஆம் தேதி கடற்படை தினமாக கொண்டாடப்படுகிறது.

மரியாதை..
இதையொட்டி, போர் நினைவிடங்களில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்யப்படுவது வழக்கம். அந்தவகையில், சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவிடத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

அலோக் பட்நாகர்...
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கடற்படை ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ராணுவத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரியில்...
இதேபோல், கன்னியாகுமரியில் கடற்படை தினம், வானவேடிக்கைகளுடன் போர் கப்பலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்காக, ஐ.என்.எஸ் சட்லெஜ் போர்க்கப்பல் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது.

சுற்றுலாப் பயணிகள்...
அதில் இருந்தபடியே கடற்படையினர் நடத்திய வான வேடிக்கைகளை குமரிக்கு வருகை தந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வெகுவாக கண்டு களித்தனர். கொண்டாட்டத்திற்குபின் இந்த கப்பல் கொச்சிக்கு புறப்பட்டு சென்றது.

விழிப்புணர்வு நிகழ்ச்சி...
கடற்படை குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
-
சிறுக சிறுக 25 சவரன் சேர்த்த விசுவாசி… சென்னை தி.நகரில் பிரபல தங்க நகைக்கடை அலறியது ஏன்?” -
ECR 2.0: சென்னையின் ‘மெகா’ முகம் மாறுகிறது! நந்தவனம் முதல் நட்சத்திர ஹோட்டல் வரை.. எல்லாமே மாறுது -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நடத்தும் நிறுவனத்தில் ரெய்டு.. தேர்தல் நேரத்தில் இறங்கிய ஐ.டி அதிகாரிகள் -
சென்னையில் கடும் சம்மருக்கு இடையே திடீர் பிங்க் வசந்தம்.. பூத்து குலுங்கும் மலர்கள்! எப்படி நடந்தது? -
ராட்சத பலூன்கள்.. ஃபிளாஷ் மாப்கள்.. தேர்தலுக்கு சென்னை எப்படி ரெடியாகிறது தெரியுமா? -
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு! உடனே விண்ணப்பிங்க -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி












Click it and Unblock the Notifications