டாஸ்மாக் மூடப்பட்டதன் எதிரொலி.. உளுந்தூர் பேட்டையில் கள் விற்பனை அமோகம்!
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் உளுந்தூர் பேட்டையில் கள் விற்பனை அதிகரித்துள்ளது.
விழுப்புரம்: நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் உளுந்தூர் பேட்டையில் கள் விற்பனை அதிகரித்துள்ளது. பாட்டிலில் அடைத்து சட்டத்திற்கு விரோதமாக கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும்நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை கடந்த 31ஆம் தேதியுடன் மூட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன.
தமிழகத்தில் மட்டும் 3000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 8 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

மதுவை தேடி அலையும் குடிமகன்கள்
இதனால் அப்பகுதி குடிமகன்கள் மதுக்கடைகளை தேடி அலைகின்றனர். இதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள விரும்பிய கள் விற்பனையாளர்கள் அதிகளவு கள்ளை இறக்கி வருகின்றனர்

பாட்டிலில் பனங்கள்ளை அடைத்து..
பனங்கள்ளை பாட்டிலில் அடைத்து ஒரு பாட்டில் 50 ரூபாய் என விற்பனை செய்து வருகின்றனர். கள் விற்பனை செய்வது சட்ட விரோதம் என்று தெரிந்த நிலையிலும் குடிமகன்களின் தவிப்பை பயன்படுத்தி உளுந்தூர் பேட்டை பகுதியில் கள் விற்பனை செய்யப்படுகிறது.

கள் விற்பனை அமோகம்
கடந்த 3 நாட்களில் மட்டும் உளுந்தூர்பேட்டையில் கள் விற்பனை செய்த 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உளுந்தூர்பேட்டையில் மதுபான பிரியர்கள் கள் குடிக்க அதிகளவில் ஆர்வம் காட்டுவதால் கள் விற்பனை அமோகமாக உள்ளது.

போதை மருந்து கலப்பு..
எளவனாசுர்கோட்டை, எடைக்கல் உள்ளிட்ட கிராமங்களில் பனை மரங்களிலிருந்து பதநீர் இறக்குவதாக கூறி அதிகளவில் கள் இறக்கப்படுகிறது. போதையின் வீரியத்தை அதிகரிக்க போதை மருந்துகளை கள்ளில் கலந்து விற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தடுக்க கோரிக்கை
இதனால் கள் குடிப்பவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கள்ளை விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் விரைந்து நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications