டாஸ்மாக் மூடப்பட்டதன் எதிரொலி.. உளுந்தூர் பேட்டையில் கள் விற்பனை அமோகம்!
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் உளுந்தூர் பேட்டையில் கள் விற்பனை அதிகரித்துள்ளது.
விழுப்புரம்: நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் உளுந்தூர் பேட்டையில் கள் விற்பனை அதிகரித்துள்ளது. பாட்டிலில் அடைத்து சட்டத்திற்கு விரோதமாக கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும்நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை கடந்த 31ஆம் தேதியுடன் மூட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன.
தமிழகத்தில் மட்டும் 3000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 8 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

மதுவை தேடி அலையும் குடிமகன்கள்
இதனால் அப்பகுதி குடிமகன்கள் மதுக்கடைகளை தேடி அலைகின்றனர். இதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள விரும்பிய கள் விற்பனையாளர்கள் அதிகளவு கள்ளை இறக்கி வருகின்றனர்

பாட்டிலில் பனங்கள்ளை அடைத்து..
பனங்கள்ளை பாட்டிலில் அடைத்து ஒரு பாட்டில் 50 ரூபாய் என விற்பனை செய்து வருகின்றனர். கள் விற்பனை செய்வது சட்ட விரோதம் என்று தெரிந்த நிலையிலும் குடிமகன்களின் தவிப்பை பயன்படுத்தி உளுந்தூர் பேட்டை பகுதியில் கள் விற்பனை செய்யப்படுகிறது.

கள் விற்பனை அமோகம்
கடந்த 3 நாட்களில் மட்டும் உளுந்தூர்பேட்டையில் கள் விற்பனை செய்த 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உளுந்தூர்பேட்டையில் மதுபான பிரியர்கள் கள் குடிக்க அதிகளவில் ஆர்வம் காட்டுவதால் கள் விற்பனை அமோகமாக உள்ளது.

போதை மருந்து கலப்பு..
எளவனாசுர்கோட்டை, எடைக்கல் உள்ளிட்ட கிராமங்களில் பனை மரங்களிலிருந்து பதநீர் இறக்குவதாக கூறி அதிகளவில் கள் இறக்கப்படுகிறது. போதையின் வீரியத்தை அதிகரிக்க போதை மருந்துகளை கள்ளில் கலந்து விற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தடுக்க கோரிக்கை
இதனால் கள் குடிப்பவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கள்ளை விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் விரைந்து நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications