தங்கம்போல ஏறி வரும் தக்காளி விலை... அதிர்ச்சியில் நெல்லைவாசிகள்
நெல்லையில் தக்காளி விலை சதமடித்துள்ளதால் இதை வாங்கி எப்படி சமைப்பது என்று தெரியாமல் பொது மக்கள் திகைப்படைந்துள்ளனர்.
திருநெல்வேலி: ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்பட்ட தக்காளி இப்போது அவர்களுக்கு எட்டா கனியாக மாறி விட்டது. கிலோ ரூ. 100க்கு விற்பனை செய்யப்படுவதால் தக்காளியை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்
தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வறட்சி நீடித்து வருகிறது. இதனால் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதோடு தற்போத தோட்ட பயிர்களையும் பயிர் செய்ய முடியவில்லை. கிணற்று நீரை நம்பி காய்கறி பயிர் செய்த விவசாயிகளுக்கு தற்போது கிணற்று நீரும் கிடைக்கவில்லை.

பொதுவாக வெயில் காலங்களில் விலை மலிவாக கிடைக்கும் தக்காளி இந்த சீசனில் வறட்சி காரணமாக விலை உயர்ந்துள்ளது. கடந்த 16ம் தேதி தக்காளி விலை ரூ.70 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.100 ஆக உயர்ந்து விட்டது. ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்பட்ட தக்காளி இப்போது அவர்களுக்கும் எட்டா கனியாக மாறி விட்டது.
இந்நிலையில் சின்ன வெங்காயத்தின் விலையும் இறங்குவதற்கான அறிகுறியே இல்லை. நெல்லையில் சின்ன வெங்காயத்தின் விலை சில வாரங்களுக்கு முன்பு ரூ.70 ஆக இருந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து தற்போது அதுவும் சதம் கண்டு விட்டது. இதனால் ஏழை, நடுந்தர மக்கள் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பல்லாரியை குறைந்த விலைக்கு வாங்கி செல்கின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications