போடிமெட்டு மலையில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்தது.. பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம்
சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Recommended Video
தேனி: தேனி மாவட்டம் போடிமெட்டு மலைப் பகுதியில் 7வது கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்ததில் 15 பேர் படுகாயமடைந்தனர்.
திருவாருர் மாவட்டம் திருத்துறை பூண்டியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 22 பேர் மூணார் சென்றிருந்தனர். சுற்றுலாவை முடித்து விட்டு போடிமெட்டு வழியாக இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வந்த வாகனம் திடீரென ப்ரேக் செயலிழந்து பாறை மீது மோதி விபத்துக்குள்ளாதில் 15 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயம் காயமடைந்தவர்கள் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கோடை விடுமுறையைத் தொடர்ந்து பலரும் குடும்பம் குடும்பமாக பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வருகின்றனர். இதனால் மலைவாசஸ்தலங்கள் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. போக்குவரத்து நெரிசலும் காணப்படுகிறது.
இதுபோல சுற்றுலா செல்வோர் தங்களது வாகனங்களை முழு அளவில் பரிசோதித்துக் கொண்டு பயணங்களை மேற்கொள்வது பாதுகாப்பானதாகும்.